ஜன.12-
அமெரிக்கா, Los Angelesஇல் ஏற்பட்டப் பெரிய தீ விபத்தில் UCLA எனப்படும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் 14 மலேசிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய உயர்கல்வி அமைச்சு உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு, தேவைப்பட்டால் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கானத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்றும், பல்கலைக்கழகத்தின் அடுத்தக் கட்ட அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து Los Angeles வரலாற்றில் மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பலர் வெளியேற்றப்படலாம் என்ற எச்சரிக்கையில் உள்ளனர். இந்த சோகமான சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசிய அரசு, Los Angelesஇல் உள்ள தூதரகம் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.







