47 ஆண்டுகளுக்கு முன்பு, சபா முதலமைச்சர் ஃபூவாட் ஸ்டீபன்ஸ், மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட டபல் சிக்ஸ் விமான விபத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மலேசிய மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கத்திற்கு, சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் சாலே கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இழப்பீடு என்பது அந்த விமான விபத்துக்காக மட்டுமல்ல. மாறாக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஹரீஸ் சாலே வலியுறுத்தினார்.
சபா முதலமைச்சர் ஃபூவாட் ஸ்டீபன்ஸ், மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள விமான நிறுவனம் சட்ட விரோதமானது என்று ஆஸ்திரேலியா புலன் விசாரணைக் குழு கடந்த வாரம் ஓர் அறிக்கையில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பினாங்கு பாலங்களின் கீழ் நுழைய தடை: எம்எம்இஏ கடும் எச்சரிக்கை

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்


