கோலாலம்பூர், ஜூலை 04-
சபா மாநிலத்தில் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கி கடனை திருப்பிச் செலுத்தும் தவணைப் பணத்தை ஒத்திவைக்கும் மொரடாரியும் சலுகையை 6 மாதத்திற்கு வழங்குவதாக முன்னணி வங்கியான பேங்க் ராக்யாட் இன்று அறிவித்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வியாபாரிகள், வங்கியில் பெற்ற கடனுக்கான தவணைப் பணத்தை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்படுமானால் அவர்கள் மொரடாரியும் சலுகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக சபாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் பேணம்பங், புட்ரான், துவரன் மற்றும் தாம்பருளி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.








