Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தவறான சிகிச்சையால் உயிரிழந்த நோயாளி : விசாரணை செய்து வருகிறது சுகாதார அமைச்சு
தற்போதைய செய்திகள்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த நோயாளி : விசாரணை செய்து வருகிறது சுகாதார அமைச்சு

Share:

கெடா சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவாறான சிகிச்சையால் நோயாளி ஒருவர் உயிரிழந்தார் என சமூக ஊடகங்களில் கடந்த வியாழக் கிழமை பரவி வந்த செய்தியைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு தற்போது விசாரணை செய்து வருகிறது.

சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனை நிர்வாகம் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் பெறப்படும் ஒவ்வொரு புகாரும் நேர்மையான முறையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு விசாரிக்கப்படும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை தமது தரப்பு மிகவும் கடுமையானதாகக் கருதுவதாக அந்த மருத்துவமனை தெரிவித்த நிலையில், குற்றஞ்சாட்டப்படுவது போல் நடந்த சம்பவம் உண்மையா அல்லது வதந்தியா எனவும் விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒரு வேளை நடந்த சம்பவம் உண்மையாக இருக்கின்ற நிலையில்,ஈரகசியக் காப்பு கொள்கைக்கு இணங்க விசாரணை முடிவை இறந்து போன நோயாளியின் குடும்பத்தாருக்கு மட்டும் தெரிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

,அருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொள்ளப்படும் நிலையில், அந்த விவகாரத்தை சுகாதார அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனை தெரிவித்தது.

இதற்கிடையில், இறந்து போன நோயாளியின் குடும்பத்தாருக்கு சுகாதார அமைச்சு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது சுகாதார அமைச்சு.

முன்னதாக, சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு நள்ளிரவு 12.45 மணி அளவில் நெஞ்சு வலி. மூச்சுத் திணறல் எனக் கூறி 51 வயது ஆடவர் ஒருவர் வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு கேஸ்திரிக் மருந்து கொடுக்கப்பட்டதாகவும், 5 மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்தார் எனவும் சமூக ஊடகங்களில் தகவல் பதவி வந்தது.

அந்த சமூக ஊடகப் பதிவின்படி, குறிப்பிட்ட மருத்துவமனையில் பணி புரிந்த துணை மருத்துவ அதிகாரி அவசர சிகிச்சைப் பிரிவில் அந்த 51 வயது நோயாளியைக் கவனித்ததாகவும் நோயாளிக்கு கேஸ்திரிக் நோய் கண்டிருப்பதாகவும் எண் வரிசைப்படி அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதிகாலை 4.30 மணி வரையில் அவர் அழைக்கப்படவும் இல்லை, மருத்துவரால் கவனிக்கப்படவில்லை.

அதிகாலை 6.00 மணி அளவில் அந்த நோயாளியின் நிலை மிகவும் மோசமடைந்த பிறகு, அவசர சிகிச்சைப் பிரிவின் சிவப்புப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டார். எனினும், காலை 6.31 மணி அளவிம் அவர் இறந்ததாக அந்த சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்