Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கைது செய்யப்பட்ட முன்னாள் ஃஎப்எம்டி செய்தியாளர் ரேக்ஸ் டான் இன்று விடுவிக்கப்படுவார்
தற்போதைய செய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் ஃஎப்எம்டி செய்தியாளர் ரேக்ஸ் டான் இன்று விடுவிக்கப்படுவார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.17-

கோலாலம்பூரில் நடைபெற்ற பொது விரிவுரை ஒன்றில், சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பியது தொடர்பாக, இன்று அதிகாலையில் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஃஎப்எம்டி செய்தியாளர் ரேக்ஸ் டான், இன்று விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் ராஜ்சூரியன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரேக்ஸ் டானை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய போலீசார் கோரிக்கை வைத்த நிலையில், மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ஃபாரா நபிஹா டான் ஒருநாள் மட்டுமே தடுப்புக் காவல் அனுமதி வழங்கினார்.

இதனையடுத்து, ரேக்ஸ் டானிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் அவர் விடுவிக்கப்படலாம் என்றும் ராஜ்சூரியன் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 12-ஆம் தேதி, “காசா சர்வதேச சக்திகளின் உடந்தையை அம்பலப்படுத்துகிறது” என்ற தலைப்பிலான விரிவுரை ஒன்று கோலாலம்பூரில் நடைபெற்றது.

அதில் பிரிட்டிஷ் அரசியல்வாதியான George Galloway கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்