ஜோகூர், பாசீர் கூடாங் இரசாயனக் கழிவு நிர்வாக நிலையத்தில் ஏற்பட்ட 100 லிட்டர் நைட்ரிக் அமிலக் கசிவு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் மதியம் 3:47 மணிக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
அதிநவீனக் கருவிகள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், காற்றில் எவ்வித நச்சு வாயுக்களும் கண்டறியப்படவில்லை என்றும், காற்றின் தரம் பாதுகாப்பான அளவில் உள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கசிவின் போது தற்காலிகமாக வெளியான மஞ்சள்-ஆரஞ்சு நிறப் புகை உடனடியாகத் தடுக்கப்பட்டு, நிலைமை சீராக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பள்ளிகளில் காற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.








