Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது லஞ்ச ஊழல்
தற்போதைய செய்திகள்

அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது லஞ்ச ஊழல்

Share:

அரசாங்க உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல், அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார். குறிப்பாக, அரசு ஊழியர்களிடையே கிரேட் 54 பிரிவுக்கு மேல் உள்ள அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வரும் இத்தகைய போக்கு, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் இது வழக்கமான நடைமுறையைப் போல் மாறி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுச் சேவைத்துறைக்கு அப்பாற்பட்ட நிலையில் அரசியல்வாதிகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர துறையைச் சார்ந்தவர்களிடமும் இத்தகைய லஞ்ச ஊழல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் தீவிரமடைந்து இருப்பதாக அஸாம் பாக்கி விவரித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்