Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது லஞ்ச ஊழல்
தற்போதைய செய்திகள்

அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது லஞ்ச ஊழல்

Share:

அரசாங்க உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல், அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார். குறிப்பாக, அரசு ஊழியர்களிடையே கிரேட் 54 பிரிவுக்கு மேல் உள்ள அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வரும் இத்தகைய போக்கு, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் இது வழக்கமான நடைமுறையைப் போல் மாறி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுச் சேவைத்துறைக்கு அப்பாற்பட்ட நிலையில் அரசியல்வாதிகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர துறையைச் சார்ந்தவர்களிடமும் இத்தகைய லஞ்ச ஊழல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் தீவிரமடைந்து இருப்பதாக அஸாம் பாக்கி விவரித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!