Mar 18, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன பாதிரியாரின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
தற்போதைய செய்திகள்

காணாமல் போன பாதிரியாரின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாதிரியார் ரேய்மண்ட் கோ குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும்படி அரசாங்கத்திற்கும், போலீஸ்துறைக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அந்த பாதிரியார் காணாமல் போன கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதிதியிலிருந்து இவ்விவகாரம் குறித்து போலீசார் அம்பலப்படுத்திய நாள் வரையில் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் ரிங்கிட் இழப்பீடு என்ற அடிப்படையில் மொத்தம் 3,188 நாட்களுக்கு 31 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை அவரின் குடும்பத்திற்கு அரசாங்கமும், போலீஸ்துறையும் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ சூ தியாங் ஜூ உத்தரவிட்டார்.

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் SS4B/10 இல் பாதிரியார் ரேய்மண்ட் கோ காரைச் செலுத்திக் கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத கும்பலினால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிரியார் ரேய்மண்ட் கோ கடத்தப்பட்ட சம்பவத்தில் சேவையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் அல்லது முன்னாள் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய பிரதிவாதிகள் ஒருவர் அல்லது அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம். ஓர் உத்தரவின் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்