கிளந்தான் மாநிலத்திலுள்ள உணவகம் ஒன்றில் தனது 5 வயது மகளை உதைத்து துன்புறுத்தியதாக 40 வயது ராணுவ வீரர் மீது கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி இரவு 10.55 மணியளவில், கோத்தா பாருவில் ஜாலான் கோலா கிராய் பகுதியில் உள்ள உணவகத்தில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிபதி ஸுல்கிஃப்லி அப்லா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, தனது குற்றத்தை மறுத்த அந்நபர், விசாரணை கோரினார்.
இக்குற்றச்சாட்டின் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறார் சட்டம் 2001-ன் 31(1)(a) பிரிவின் கீழ், அதிகபட்சம் 50 ஆயிரம் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








