பெட்ரோனாஸ் மற்றும் பெர்ரோலியம் சரவாக் பெர்ஹாட் எனப்படும் பெட்ரோஸ் ஆகிய நிறுவனங்கள், நாட்டின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இரு நிறுவனங்களுக்கும் இடையிலான சர்ச்சைக்கு தீர்வு காண, மாநில மற்றும் மத்திய அரசுகளின் உரிமைகள் மற்றும் சட்டங்களை இரு தரப்பும் மதித்து அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெட்ரோனாஸ் – பெட்ரோஸ் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்தி இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காண முடியாத காரணம் எதுவும் இல்லை என்றும் கூச்சிங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான மலேசிய தினக் கொண்டாட்டத்தில் அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசாங்கத்தால் தீர்க்க முடியாத எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








