ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் பாடநெறிக்கு புறம்பான செயல்பாடுகளை கைமுறையாகப் பதிவு செய்யும் முறையை ரத்து செய்வது உட்பட 12 முக்கிய முன்முயற்சிகளை மலேசியக் கல்வி அமைச்சு ஃபத்லினா சிடேக் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு அறிவித்துள்ளார்.
55-வது தேசிய அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்ட விழாவில் பேசிய அவர், மாணவர்களின் பாடநெறித் தகவல்கள் PAJSK அமைப்பில் உள்ளீடு செய்யப்படுவதற்கு முன்பு, அதனை நிர்வகிக்கும் தன்னாட்சி அதிகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த முறையை மேலும் எளிதாக்க PAJSK மற்றும் APDM ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முறையை ஒழிப்பதன் மூலம் ஆசிரியர்கள் வகுப்பறை மற்றும் மாணவர்களின் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்றும், ஆசிரியர்களின் டிஜிட்டல் கல்வியறிவை வலுப்படுத்த 'கூகுள் சான்றளிக்கப்பட்ட கல்வியாளர்'பயிற்சிகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.








