Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜித் இந்தியாவில் திடீர் சோதனை, நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
தற்போதைய செய்திகள்

மஸ்ஜித் இந்தியாவில் திடீர் சோதனை, நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

மலேசிய குடிநுழைவுத்துறையினர், கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பயண ஆவணங்கள் இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட அந்நிய நாட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்தச் சோதனையின் போது மொத்தம் 758 அந்நிய நாட்டவர்களிடம் சோதனையிடப்பட்டது. இதில் 171 பேர் குடிநுழைவு தொடர்பான குற்றறங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களின் பெரும் பகுதியினர் இந்தியா, வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

சிலர் தப்பி ஓட முயற்சி செய்து ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டனர். இன்னும் சிலர், கடைகளில் சட்டவிரோதமாக வேலை செய்த போதிலும், அதிகாரிகளைக் கண்டதும் வாடிக்கையாளர்களைப் போல நடிக்கத் தொடங்கியதாக பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.

எனினும் மழை பெய்ததால் சோதனையை முழுமையாக மேற்கொள்ள இயலவில்லை என்று அவர் விளக்கினார்.

அனைத்து முதலாளிகளும் வெளிநாட்டினரைச் சட்டப்பூர்வமாக வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும், அவர்களைச் சட்டவிரோதமாகப் பணியமர்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஸ்ரி ஒத்மான் எச்சரித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது