Aug 31, 2026
Thisaigal NewsYouTube
காஜாங் சாலையோரம் இளைஞர் மீது பயங்கர தாக்குதல் - 4 பேர் கைது
தற்போதைய செய்திகள்

காஜாங் சாலையோரம் இளைஞர் மீது பயங்கர தாக்குதல் - 4 பேர் கைது

Share:

காஜாங்கில் நேற்று அதிகாலை சாலையோரத்தில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

29 வயதான அந்நபர், தனக்குத் தெரிந்த சிலரால் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இது குறித்து காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 4 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் பின்னணி இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தற்போது காஜாங் மருத்துவமனையில் தீவிர காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலுக்கான காரணத்தை கண்டறியவும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டு கைது செய்யவும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related News

பேராவில் சுற்றுலாப் பயணிகளுக்கு 40 ரிங்கிட் வவுச்சர் – 2,000 பேருக்கு சிறப்பு சலுகை

பேராவில் சுற்றுலாப் பயணிகளுக்கு 40 ரிங்கிட் வவுச்சர் – 2,000 பேருக்கு சிறப்பு சலுகை

நெறிமுறைகளை உடைத்து மக்களோடு மக்களாக அலவளாவிய அன்வார் - ஆச்சரியத்தில் திளைத்த பார்வையாளர்கள்

நெறிமுறைகளை உடைத்து மக்களோடு மக்களாக அலவளாவிய அன்வார் - ஆச்சரியத்தில் திளைத்த பார்வையாளர்கள்

தேசிய தின அணிவகுப்பில் மிரள வைத்த மலேசியாவின் ஆயுத பலம் – ஏவுகணைகள், குண்டுகளைப் பார்த்து வியந்த மக்கள்

தேசிய தின அணிவகுப்பில் மிரள வைத்த மலேசியாவின் ஆயுத பலம் – ஏவுகணைகள், குண்டுகளைப் பார்த்து வியந்த மக்கள்

கம்போங் புங்கையில் சோகம்: கடலில் மூழ்கி தந்தையும் 8 வயது மகனும் பலி

கம்போங் புங்கையில் சோகம்: கடலில் மூழ்கி தந்தையும் 8 வயது மகனும் பலி

80 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட தேசிய தின விழா: மாமன்னர், பேரரசியார் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

80 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட தேசிய தின விழா: மாமன்னர், பேரரசியார் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

அதிகரித்து வரும் புகைமூட்டம்: அவசரநிலையை அறிவிக்கத் தயாராகிறது சரவாக்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: அவசரநிலையை அறிவிக்கத் தயாராகிறது சரவாக்