Aug 30, 2026
Thisaigal NewsYouTube
அதிகரித்து வரும் புகைமூட்டம்: அவசரநிலையை அறிவிக்கத் தயாராகிறது சரவாக்
தற்போதைய செய்திகள்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: அவசரநிலையை அறிவிக்கத் தயாராகிறது சரவாக்

Share:

சரவாக் மாநிலத்தில் காற்று மாசுக் குறியீடு 500-ஐ தாண்டும் பட்சத்தில் அவசரநிலை அறிவிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அம்மாநில துணை முதல்வர் டாக்லஸ் உங்கா எம்பாஸ் தெரிவித்துள்ளார்.

மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவருமான அவர், காற்று மாசு 500-க்கு மேல் சென்றால் அத்தியாவசிய சேவைகளைத் தவிர அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பணியிடங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநில மற்றும் மத்திய அரசின் தொடர்புடைய அமைப்புகளுடன் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேசிய தின நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதா, ஒத்திவைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பதை சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பொதுமக்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து தங்களது விருப்பப்படி முடிவு செய்யலாம் என்றும் டாக்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

1 பில்லியன் டிஜிட்டல் நிதி: முதற்கட்டமாக 15 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

1 பில்லியன் டிஜிட்டல் நிதி: முதற்கட்டமாக 15 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

நேபாள பெருவெள்ளம்: உலகின் கவனத்தை ஈர்த்த அந்த 'ஒற்றை வீடு'

நேபாள பெருவெள்ளம்: உலகின் கவனத்தை ஈர்த்த அந்த 'ஒற்றை வீடு'

காலனித்துவக் கால சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ராம்கர்பால் கோரிக்கை

காலனித்துவக் கால சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ராம்கர்பால் கோரிக்கை

பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான ஊழல் நிதி மீண்டும் மக்களுக்கே: கல்வி, சுகாதாரத்திற்குப் பயன்படுத்தப்படும் என அன்வார் அறிவிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான ஊழல் நிதி மீண்டும் மக்களுக்கே: கல்வி, சுகாதாரத்திற்குப் பயன்படுத்தப்படும் என அன்வார் அறிவிப்பு

நேபாள பேரிடர்: காணாமல் போன மலேசியர்களை அடையாளம் காண உறவினர்களுக்கு மரபணு பரிசோதனை

நேபாள பேரிடர்: காணாமல் போன மலேசியர்களை அடையாளம் காண உறவினர்களுக்கு மரபணு பரிசோதனை

திரெங்கானு கியூப் பிரிக்ஸ் பந்தயத்தில் விபத்து: 18 வயது வீரர் உயிரிழப்பு

திரெங்கானு கியூப் பிரிக்ஸ் பந்தயத்தில் விபத்து: 18 வயது வீரர் உயிரிழப்பு