Aug 30, 2026
Thisaigal NewsYouTube
திரெங்கானு கியூப் பிரிக்ஸ் பந்தயத்தில் விபத்து: 18 வயது வீரர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

திரெங்கானு கியூப் பிரிக்ஸ் பந்தயத்தில் விபத்து: 18 வயது வீரர் உயிரிழப்பு

Share:

மலேசிய கியூப் பிரிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 18 வயது பந்தய வீரர் ஃபாரெஸ் புத்ரா ஃபாடில், பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று திரெங்கானு மோட்டார் சர்க்யூட்டில் நடைபெற்ற போட்டியின் முதல் சுற்றில், Turn 3 பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குப் பிறகு ஃபாரெஸ் புத்ராவுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டு, கோல திரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஸாஹிரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஃபாரெஸ் புத்ரா, Petronas Sprinta Yamaha CKJ Racing அணியின் உறுப்பினராக இருந்தார்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பெறோரோனாஸ் நிறுவனம், விபத்து தொடர்பான விசாரணைக்கு AAM Motorsports அமைப்புக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Related News

திரெங்கானு கியூப் பிரிக்ஸ் பந்தயத்தில் விபத்து: 18 வயது வ... | Thisaigal News