Aug 30, 2026
Thisaigal NewsYouTube
தேசிய தினக் கொண்டாட்ட ஒத்திகை: மலேசியர்களின் மனதை கவர்ந்த கே9 ஸிஆவ் பாவ்
தற்போதைய செய்திகள்

தேசிய தினக் கொண்டாட்ட ஒத்திகை: மலேசியர்களின் மனதை கவர்ந்த கே9 ஸிஆவ் பாவ்

Share:

புத்ராஜெயாவில் நாளை நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், ஸிஆவ் பாவ் என்ற பாசமான கே9 பிரிவைச் சேர்ந்த நாய், மலேசியர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், பொதுமக்கள் ஸிஆவ் பாவ் என அழைத்ததும் அவர்களிடம் சென்று பாசமாக தடவிக் கொடுக்க அனுமதிப்பதைக் காண முடிகின்றது.

மற்றொரு காணொளியில் ஸிஆவ் பாவ் முதுகில் படுத்து நான்கு கால்களையும் தூக்கி வைத்துக்கொண்டு, பொதுமக்கள் வயிற்றை தடவிக் கொடுப்பதை ரசித்த காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.

பொதுவாக கே9 பிரிவைச் சேர்ந்த நாய்கள் கண்டிப்பான தோற்றத்துடன் காணப்படும் நிலையில், ஸிஆவ் பாவ்வின் இந்த பாசமான செயல்கள் இணையத்தில் நகைச்சுவையான கருத்துகளையும் பெற்றுள்ளன.

முன்னதாக நேற்று, டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய தின முழு ஒத்திகையில் கிங் ஒயென் என்ற 6 வயது பூனை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஜாலூர் கெமிலாங் வடிவிலான சட்டை,தலைப்பாகை மற்றும் கண்ணாடி அணிந்து ஒத்திகையில் பங்கேற்ற கிங் ஒயென், தொடர்ந்து நான்காவது ஆண்டாக மெர்டெக்கா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News