Aug 30, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கினபாலுவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் தீக்கிரையாகின, 3 குழந்தைகள் பலி
தற்போதைய செய்திகள்

கோத்தா கினபாலுவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் தீக்கிரையாகின, 3 குழந்தைகள் பலி

Share:

சபா மாநிலம், கோத்தா கினபாலு அருகே உள்ள கம்போங் லோக் பூட்டா, நும்பாக் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின.

இதனையடுத்து அவற்றில் வசித்து வந்த 200-க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபா, சரவாக் மாநிலங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முஸ்தஃபா சக்மூட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இத்தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் சிறப்பு உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News