Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பி.எஸ்.எம் கட்சித் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் உட்பட நால்வர் விடுவிப்பு கைது
தற்போதைய செய்திகள்

பி.எஸ்.எம் கட்சித் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் உட்பட நால்வர் விடுவிப்பு கைது

Share:

பேரா, தம்புன், கந்தான் நிலப்பகுதியில் விவசாயம் செய்து வரும் குடியானவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் ஆட்சேப நடவடிக்கை​யில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் உட்பட நால்வர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

அந்த நால்வரிடம் போ​லீசார் வாக்குமூலம் பதிவு செய்தப்பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பி.எஸ்.எம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆர். கார்த்திகேஸ், அக்கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் P. கேசவன், ஒரு விவசாயியான ஹோ பொன் டைன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களின் அடங்குவர்.

போ​லீசார் ம​ற்றும் அரசு அதிகாரிகள் கடமையாற்றுவதிலிருந்து தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு இடையூறு விளைவித்தாக கூறி டாக்டர் மைக்கல் ​ஜெயக்குமார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். பேரா மாநில நிலம், சுரங்கம், கனிமவளத்துறை அலுவலகத்தின் முன் ஆட்சேப நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களை போ​லீசார் கைது செய்தனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு