Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கார் - குப்பை லாரி மோதல் - இரு சகோதரர்கள் கருகி பலி
தற்போதைய செய்திகள்

கார் - குப்பை லாரி மோதல் - இரு சகோதரர்கள் கருகி பலி

Share:

நேற்று, ஈப்போவில் உள்ள பெர்சாம் தொழிற்பேட்டையில் காரும் குப்பை லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் பலியான மூவரில் இரண்டு சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

20 வயது எம் க்ரிஷ்னா, அவரது 16 தம்பி பவிலேஷ் இவர்களின் உறவினரான 16 வயது என்கே சுபாஷ் வர்மன்ஆகியோர் ப்ரோத்தோன் பெர்டானா தஞ்சோங் இரம்புத்தானில் இருந்து காரில் பயணம் செய்தார்கள் என ஈப்போ மாவட்டக் காவல் துறை தலைவர் உதவி ஆணையர் யஹாயா ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

சாலையின் ஒரு வளைவு பகுதியில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த குப்பை லாரியை அந்த மூவர் பயணித்தக் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

லாரியின் அடியில் சிக்கிக் கொண்ட கார் தீ பிடித்துக் கொண்டதில் அந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குப்பை லாரியை ஓட்டி வந்தவருக்கும் 4 பணியாளர்களுக்கும் எந்தக் காயமும் ஏற்பட வில்லை என யஹாயா ஹாஸ்ஸான் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் சடலம் ஈப்போ பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு அவர்களின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என அவர் மேலும் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!