கிள்ளான் வட்டாரத்தில் கடந்த புதன்கிழமை ரோந்து போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள் திருடர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முற்பட்ட அவர்களை பொது மக்கள் உதவியுடன் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் த லைவர் ஏசிபி எஸ்.விஜயா ராவ் தெரிவித்தார்.
யாமஹா 135 எல்.சி மோட்டார் சைக்கிளில் சென்ற அவ்விருரையும் மடக்கி போலீசார் சோதனையிட்ட போது, மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு பல்முனை சாவி ஒன்றை அவர்கள் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளதாக ஏசிபி விஜயராவ் குறிப்பிட்டார்.
30 வயதுமதிக்கத் தக்க அவ்விருவரும் பண்டார் பாரு கிள்ளான் கில் பிற்பகல் 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஏசிபி விஜயராவ் தெரிவித்தார்.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


