சிலாங்கூர்,ஜூலை 27-
உலு சிலாங்கூர் வட்டாரத்தில் சில மாணவர்களை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக சந்தேகிகப்படும் ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உலு சிலாங்கூர், Bukit Beruntung- கில் உள்ள தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 30 வயது மதிக்க அந்த விளையாட்டுப்பயிற்சி ஆசிரியர், மாணவர்களிடம் ஆபாச சேட்டைப் புரிந்ததாக நான்கு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden Ahmad Faizal Tahrim தெரிவித்தார்.
முதல் சம்பவத்தில் 12 வயது மாணவன் ஒருவனிடம் ஒரு மாத காலமாக பாலியல் பலாத்காரம் புரிந்து வந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக Ahmad Faizal குறிப்பிட்டார்.
கால்பந்தாட்டப் பயிற்சி அளிப்பதாக கூறி, Ulu Yam பகுதியில் முகாமிடப்பட்டு, மாணவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த போது, அந்த ஆசிரியர் இந்த கைங்கரியத்தை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக அந்த ஆசிரியர் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Ahmad Faizal தெரிவித்தார்.








