Jul 2, 2026
Thisaigal NewsYouTube
Global Sumud Flotilla தன்னார்வாலர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது உலகளாவிய மனித நேயத்திற்கு முரணானது: மாமன்னர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

Global Sumud Flotilla தன்னார்வாலர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது உலகளாவிய மனித நேயத்திற்கு முரணானது: மாமன்னர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03-

காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களைக் கொண்டுச் சென்ற Global Sumud Flotilla தன்னார்வாலர்களின் கப்பலை இடைமறித்து, அவர்கள் அனைவரையும் தடுத்து வைத்திருப்பது, உலகளாவிய மனிநேயத்திற்கு முரணானதாகும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

Global Sumud Flotilla தன்னார்வாலர்களின் பணியில் மனிதாபிமானமும், மனிதநேயமும் இருந்த போதிலும்,அவர்களை இடைமறித்து சிறைப்பிடித்து இருப்பது உலகளாவிய மதிப்புகளுக்கு எதிரானதாகும் என்று மாமன்னர் வர்ணித்தார்.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பசியால் அவதிப்படுபவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, தன்னார்வாலர்களை உள்ளடக்கிய நிலையில் இந்த உன்னதப் பணி மேற்கொள்ளப்பட்டதாக மாமன்னர் விவரித்தார்.

மலேசியர்கள் உட்பட Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் ஈடுபட்டுள்ள தன்னார்வாலர்கள், அனைத்துலக அரங்கிற்கு மனித நேய செய்தியைக் கொண்டுச் சென்றதில் ஆபத்தையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

அவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் மனிதாபிமானப் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், அவர்கள் தடுக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இது உண்மையிலேயே உலகளாவிய மனித நேய அம்சங்களுக்கு எதிரானதாகும் என்று இன்று தமது முக நூலில் வெளியிட்டுள்ள செய்தியில் மாமன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்