Mar 20, 2026
Thisaigal NewsYouTube
Global Sumud Flotilla தன்னார்வாலர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது உலகளாவிய மனித நேயத்திற்கு முரணானது: மாமன்னர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

Global Sumud Flotilla தன்னார்வாலர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது உலகளாவிய மனித நேயத்திற்கு முரணானது: மாமன்னர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03-

காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களைக் கொண்டுச் சென்ற Global Sumud Flotilla தன்னார்வாலர்களின் கப்பலை இடைமறித்து, அவர்கள் அனைவரையும் தடுத்து வைத்திருப்பது, உலகளாவிய மனிநேயத்திற்கு முரணானதாகும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

Global Sumud Flotilla தன்னார்வாலர்களின் பணியில் மனிதாபிமானமும், மனிதநேயமும் இருந்த போதிலும்,அவர்களை இடைமறித்து சிறைப்பிடித்து இருப்பது உலகளாவிய மதிப்புகளுக்கு எதிரானதாகும் என்று மாமன்னர் வர்ணித்தார்.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பசியால் அவதிப்படுபவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, தன்னார்வாலர்களை உள்ளடக்கிய நிலையில் இந்த உன்னதப் பணி மேற்கொள்ளப்பட்டதாக மாமன்னர் விவரித்தார்.

மலேசியர்கள் உட்பட Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் ஈடுபட்டுள்ள தன்னார்வாலர்கள், அனைத்துலக அரங்கிற்கு மனித நேய செய்தியைக் கொண்டுச் சென்றதில் ஆபத்தையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

அவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் மனிதாபிமானப் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், அவர்கள் தடுக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இது உண்மையிலேயே உலகளாவிய மனித நேய அம்சங்களுக்கு எதிரானதாகும் என்று இன்று தமது முக நூலில் வெளியிட்டுள்ள செய்தியில் மாமன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து