Dec 3, 2025
Thisaigal NewsYouTube
Global Sumud Flotilla தன்னார்வாலர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது உலகளாவிய மனித நேயத்திற்கு முரணானது: மாமன்னர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

Global Sumud Flotilla தன்னார்வாலர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது உலகளாவிய மனித நேயத்திற்கு முரணானது: மாமன்னர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03-

காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களைக் கொண்டுச் சென்ற Global Sumud Flotilla தன்னார்வாலர்களின் கப்பலை இடைமறித்து, அவர்கள் அனைவரையும் தடுத்து வைத்திருப்பது, உலகளாவிய மனிநேயத்திற்கு முரணானதாகும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

Global Sumud Flotilla தன்னார்வாலர்களின் பணியில் மனிதாபிமானமும், மனிதநேயமும் இருந்த போதிலும்,அவர்களை இடைமறித்து சிறைப்பிடித்து இருப்பது உலகளாவிய மதிப்புகளுக்கு எதிரானதாகும் என்று மாமன்னர் வர்ணித்தார்.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பசியால் அவதிப்படுபவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, தன்னார்வாலர்களை உள்ளடக்கிய நிலையில் இந்த உன்னதப் பணி மேற்கொள்ளப்பட்டதாக மாமன்னர் விவரித்தார்.

மலேசியர்கள் உட்பட Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் ஈடுபட்டுள்ள தன்னார்வாலர்கள், அனைத்துலக அரங்கிற்கு மனித நேய செய்தியைக் கொண்டுச் சென்றதில் ஆபத்தையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

அவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் மனிதாபிமானப் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், அவர்கள் தடுக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இது உண்மையிலேயே உலகளாவிய மனித நேய அம்சங்களுக்கு எதிரானதாகும் என்று இன்று தமது முக நூலில் வெளியிட்டுள்ள செய்தியில் மாமன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்