Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வேலை வாய்ப்பு மோசடி : 26 பேரை மீட்கும் முயற்சியில் அரசாங்கம்
தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்பு மோசடி : 26 பேரை மீட்கும் முயற்சியில் அரசாங்கம்

Share:

மியான்மரின் லவுக்கைங்கில் வேலைவாய்ப்பு மோசடியில் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 26 மலேசியர்களை அடையாளம் கண்டு அவர்களை மீட்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக வெளியுறவுத்துறை துணை அமைச்சர் முஹமாட் அலாமின் தெரிவித்தார்.

தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து மியான்மரின் யாங்கூனில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக மலேசியாவுக்குக் கொண்டு வர அனைத்து மாற்று வழிகளையும் அரசாங்கம் ஒருங்கிணைத்து பயன்படுத்துகிறது என்றார்.

கடந்த நவம்பர் 3 ஆம் தேதி வரையில், தமது அமைச்சு 518 பேரை மீட்டுள்ளது எனவும் விசாரணைக்கு உதவ, தாயகம் திரும்பியவுடன், காவல் துறையினர் அவர்களை நேரில் சந்தித்து தகவ; சேகரிக்க இருப்பதாகவும் முஹமாட் அலாமின் கூறினார்.

அதே சமயம், சந்தேகத்திற்குரிய சமூக ஊடக தளங்கள் மூலம் எந்தவொரு வேலை வாய்ப்புகளையும் ஏற்கும்போது, எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மலேசியர்களுக்கும் வெளியுறவு அமைச்சு நினைவூட்டுகிறது என்றார் அவர்.

வேலைவாய்ப்பு மோசடி குற்றங்களில் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை வகுக்க மியான்மர் நாட்டு அதிகாரத்துவத்திடம் இருந்து சம்மதத்தைப் பெற மலேசிய அரசாங்கம் காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு