கோலாலம்பூர், பிப்ரவரி.28-
நாட்டின் மூத்த எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான அடிபா அமீன், ஏழு தசாப்த கால இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில், வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி சிறப்புப் பாராட்டு விழா ஒன்று நடைபெறவுள்ளது.
தற்போது 90 வயதாகும் அடிபா அமீன், முதுமை கால உடல்நலச் சவால்களை எதிர்கொண்டு வருகிறார். அவரது மருத்துவப் பராமரிப்பிற்கான நிதி திரட்டுவதற்காகவும், அவரது சேவையை அங்கீகரிக்கவும் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் இணைந்து இந்த விழாவை ஒருங்கிணைத்துள்ளனர்.
அடிபா அமீன், New Straits Times, The Star மற்றும் பெரித்தா ஹரியான் ஆகிய முன்னணி நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, பெரித்தா ஹரியான் நாளிதழின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
மலேசிய இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் மைல்கல்லாக விளங்கும் அடிபா அமீனின் எழுத்துப் பயணத்தைக் கொண்டாடும் இந்த விழா மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.








