Apr 19, 2026
Thisaigal NewsYouTube
மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!
தற்போதைய செய்திகள்

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

கோலாலம்பூர், Sprint நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட குடி போதை தடுப்புச் சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உட்பட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 30 வயதுக்குட்பட்ட அந்த வழக்கறிஞர், தான் நேற்று மாலையே மது அருந்தியதாகவும் இவ்வளவு நேரம் கழித்து அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறிய போதிலும், சுவாசப் பரிசோதனையில் அவர் போதையில் இருந்தது உறுதிச் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வுத் துறைத் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார்.

மது போதையில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புடன் கூடிய விபத்துகளுக்குக் காரணமாக அமைவதால், இதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்று தெரிவித்த முஹமட் ஸம்ஸுரி, பொதுமக்கள் e-hailing சேவைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

Related News

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை: கருத்துரிமை பறிப்பல்ல, பாதுகாப்பு நடவடிக்கை என ஃபஹ்மி விளக்கம்

16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை: கருத்துரிமை பறிப்பல்ல, பாதுகாப்பு நடவடிக்கை என ஃபஹ்மி விளக்கம்