May 6, 2026
Thisaigal NewsYouTube
பகாங்கில் பொறியியலாளர் வீட்டிற்குள் ஊடுருவிய மர்ம நபர்: 2 நாட்களுக்குப் பிறகு கைது
தற்போதைய செய்திகள்

பகாங்கில் பொறியியலாளர் வீட்டிற்குள் ஊடுருவிய மர்ம நபர்: 2 நாட்களுக்குப் பிறகு கைது

Share:

குவாந்தான், டிசம்பர்.09-

பாயா பூலாய், கம்போங் பத்து 4-ல் உள்ள தனது வீட்டில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நடமாடுவதைக் கண்ட பொறியியலாளர் ஒருவர், உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தின் போது, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், அந்த மர்ம நபர், வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தெமர்லோ போலீசார், அந்த மர்ம நபரைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு, பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், 36 வயதான அந்த ஆடவரைப் போலீசார் கைது செய்ததாக தெமர்லோ மாவட்ட போலீஸ் துணை ஆணையர் முகமட் நஷிம் பாஹ்ரோன் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 29-ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட வெள்ளை நிற நிசான் நவாரா காரையும் அவரிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, அந்த ஆடவர் methamphetamine என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாகவும் முகமட் நஷிம் பாஹ்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

பகாங்கில் பொறியியலாளர் வீட்டிற்குள் ஊடுருவிய மர்ம நபர்: 2... | Thisaigal News