Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பகாங்கில் பொறியியலாளர் வீட்டிற்குள் ஊடுருவிய மர்ம நபர்: 2 நாட்களுக்குப் பிறகு கைது
தற்போதைய செய்திகள்

பகாங்கில் பொறியியலாளர் வீட்டிற்குள் ஊடுருவிய மர்ம நபர்: 2 நாட்களுக்குப் பிறகு கைது

Share:

குவாந்தான், டிசம்பர்.09-

பாயா பூலாய், கம்போங் பத்து 4-ல் உள்ள தனது வீட்டில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நடமாடுவதைக் கண்ட பொறியியலாளர் ஒருவர், உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தின் போது, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், அந்த மர்ம நபர், வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தெமர்லோ போலீசார், அந்த மர்ம நபரைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு, பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், 36 வயதான அந்த ஆடவரைப் போலீசார் கைது செய்ததாக தெமர்லோ மாவட்ட போலீஸ் துணை ஆணையர் முகமட் நஷிம் பாஹ்ரோன் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 29-ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட வெள்ளை நிற நிசான் நவாரா காரையும் அவரிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, அந்த ஆடவர் methamphetamine என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாகவும் முகமட் நஷிம் பாஹ்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு