May 25, 2026
Thisaigal NewsYouTube
மகனின் விடுதலைக்காக போராடும் தந்தை கார்த்திகேசு
தற்போதைய செய்திகள்

மகனின் விடுதலைக்காக போராடும் தந்தை கார்த்திகேசு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 12-

கம்போடியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தனது மகனின் விடுதலைக்காக மலேசியாவைச் சேர்ந்த கார்த்திகேசு தொடர்ந்து போராடி வருகிறார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கம்போடியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தனது 27 வயது மகனை அங்கிருந்து மீட்பதற்கு ஒரு தொழில்நுட்ப வல்லுநரான கார்த்திகேசு, மனித உரிமைகள் மீதான ஆசியான் அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் உதவியை நாட்டியுள்ளார்.

அந்த ஆணையத்தின் உதவியுடன் இம்முறை தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று கார்த்திகேசு நம்புகிறார்.

கார்த்திகேசுவின் மகன் ஹேமகவின் , கடந்த 2016 ஆம் ஆண்டில் கம்போடியாக தலைநகர் நோம்பெனுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி, ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி, Hemakavin, கம்போடியா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஹேமகவின் - னுக்கு கம்போடியா நீதிமன்றம் 25 ஆண்டு சிறைத் தண்டனையும் 45 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்துள்ளது.

ஹேமகவின் , கைது செய்யப்படும் போது அவர் பதின்ம வயதுடைய இளைஞர் ஆவார். எனவே அவரின் வயதை கருத்தில் கொண்டு கம்போடியா நாட்டின் அரச மன்னிப்பு கேட்டு மனித உரிமை அமைப்புகளின் உதவியுடன் கார்த்திகேசு போராடி வருகிறார்.

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மகனின் விடுதலைக்காக போராடும் தந்தை கார்த்திகேசு | Thisaigal News