Mar 16, 2026
Thisaigal NewsYouTube
மணல் அள்ளும் கும்பலால் ஆற்றுக்கு நாசம்: 2 மில்லியன் மக்களுக்கு குடிநீர் தடை!
தற்போதைய செய்திகள்

மணல் அள்ளும் கும்பலால் ஆற்றுக்கு நாசம்: 2 மில்லியன் மக்களுக்கு குடிநீர் தடை!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.30-

ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட கடுமையான மாசு காரணமாகக் கோத்தா திங்கி, ஜோகூர் பாரு, கூலாய் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 400 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் குடிநீர் விநியோகத் தடையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்ப்புத் துறை நடத்திய விசாரணையில், இந்தப் பெரிய மாசுக்குக் காரணம் மணல் அள்ளும் பகுதிக்கு அருகில் இருந்த சேறு சேமிப்புக் குளத்தின் சுவர் உடைந்ததே எனத் தெளிவாகியுள்ளது.

இயற்கை வளங்கள், சுற்றுச் சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி கானி, இந்தச் சம்பவம் ஒரு தீவிரமான விவகாரம் எனக் கருதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், விசாரணையில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கவும் கட்டளையிட்டுள்ளார். இந்தக் கடுமையான விளைவுகளின் தொடர்ச்சியாக, ஜோகூர் நீர் ஒழுங்குமுறை அமைப்பான Badan Kawal Selia Air Johor, சம்பந்தப்பட்ட மணல் அள்ளும் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related News

மணல் அள்ளும் கும்பலால் ஆற்றுக்கு நாசம்: 2 மில்லியன் மக்கள... | Thisaigal News