கோல திரங்காணுவில் தொலைப்பேசி அழைப்பு மோசடியில் சிக்கிய 70 வயது மூதாட்டி, 76 ஆயிரத்து 113 ரிங்கிட்டை இழந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாத மத்தியில், போலீஸ் அதிகாரி போல் நாடகமாடி தொலைப்பேசியில் அழைத்த மர்ம நபர், அம்மூதாட்டியை மிரட்டி பணப் பரிமாற்றம் செய்யும்படி கூறியுள்ளதாக கோல திரங்காணு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமது நூர் தெரிவித்துள்ளார்.
அம்மூதாட்டி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றிலிருந்து விடுவிக்க பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்நபர் தொலைப்பேசியில் மிரட்டியுள்ளார்.
அதனை நம்பிய அம்மூதாட்டி, 12 தவணையாக 70 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் அந்நபர் கூறிய கணக்கிற்குப் பணப்பரிமாற்றம் செய்துள்ளதாகவும் அஸ்லி முகமது நூர் குறிப்பிட்டுள்ளார்.








