Mar 7, 2026
Thisaigal NewsYouTube
கோல திரங்காணுவில் மூதாட்டியிடம் தொலைப்பேசி மோசடி: 76 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்
தற்போதைய செய்திகள்

கோல திரங்காணுவில் மூதாட்டியிடம் தொலைப்பேசி மோசடி: 76 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்

Share:

கோல திரங்காணுவில் தொலைப்பேசி அழைப்பு மோசடியில் சிக்கிய 70 வயது மூதாட்டி, 76 ஆயிரத்து 113 ரிங்கிட்டை இழந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாத மத்தியில், போலீஸ் அதிகாரி போல் நாடகமாடி தொலைப்பேசியில் அழைத்த மர்ம நபர், அம்மூதாட்டியை மிரட்டி பணப் பரிமாற்றம் செய்யும்படி கூறியுள்ளதாக கோல திரங்காணு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமது நூர் தெரிவித்துள்ளார்.

அம்மூதாட்டி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றிலிருந்து விடுவிக்க பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்நபர் தொலைப்பேசியில் மிரட்டியுள்ளார்.

அதனை நம்பிய அம்மூதாட்டி, 12 தவணையாக 70 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் அந்நபர் கூறிய கணக்கிற்குப் பணப்பரிமாற்றம் செய்துள்ளதாகவும் அஸ்லி முகமது நூர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது

கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது

தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து

தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா

ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்

ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்

கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்

கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்