Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சி தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை
தற்போதைய செய்திகள்

பெர்சத்து கட்சி தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை

Share:

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சத்து கட்சியின் தேர்தலில் தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் இன்று அறிவித்துள்ளார். கட்சியின் தேசியத் தலைவர் பதவியை கைவிடுவதற்கு தமக்கு காலம் கனிந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தலைவர் பதவியை கைவிடுவதற்கு கட்சி உறுப்பினர்கள் தம்மை அனுமதிக்க வேண்டும் என்று இன்று ஷா ஆலாம்மில் நடைபெற்ற பெர்சத்து கட்சியின் பேராளரர் மாநாட்டில் உரையாற்றுகையில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதுன் இதனை அறிவித்துள்ளார்.

முகை​தினின் இந்த திடீர் அறிவிப்பை ​கேட்டு பேராளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் , வேண்டாம் என்று உரக்க கத்தியதுடன் பலர் அழுதனர். முகை​தீனி​ன் இந்த அறிவிப்பு யாரும் எதிர்பார்க்காததால் கூட்டத்தின் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்