Mar 12, 2026
Thisaigal NewsYouTube
செந்தூல் ஆலயத்தின் பாலஸ்தான விழா
தற்போதைய செய்திகள்

செந்தூல் ஆலயத்தின் பாலஸ்தான விழா

Share:

கோலாலம்பூர், செந்தூல், லோரோங் செந்தூல் பாசார் ஒஃப் செந்தூல் பசார் என்ற முகவரியில் வீற்றுள்ள ஸ்ரீ சிவ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிக்கு வழிவிடும் வகையில் ஆலயத்தின் பாலஸ்தான நிகழ்வு வரும் அக்டோபர் முதல் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

செந்தூல், ரத்தினப்பிள்ளை கிராமத்துக்கு அருகில் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் "கேங் லைன்" ( Geng Line ) ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆலயம், ரயில் இரட்டை தண்டவாளப்பாதை நிர்மாணிப்புத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில் கைவிடப்பட்ட போது அந்த ஆலயத்தை பராமரித்து வந்த ந. தினகரன், 17 ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அனுமதியுடன் ஆலயத்தை செந்தூல் பசாருக்கு பின்னால் இடம் மாற்றம் செய்தார்.

ஸ்ரீ சிவ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிக்கு வழிவிடும் வகையில் ஆலயத்தின் பாலஸ்தானம் நிகழ்வு வரும் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக தினகரன் விவரித்தார்.

17 ஆண்டுகள் புதிய இடத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சிவ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் பாலஸ்தானம் நிகழ்விற்கு சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்யுமாறு ஆலயத் தோற்றுநர் தினகரன்கேட்டுக்கொள்கிறார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு