சிலாங்கூர் மாநிலம், சுங்கை பூலோவில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அவரது சடலம் மீட்கப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபீஸ் நூர் தெரிவித்தார்.
உயிரிழந்தவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில், சுங்கை பூலோ மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது மரணம் குற்றச் செயலால் ஏற்பட்டது தெரியவந்தது.
சுமார் 170 செ.மீ. உயரமும் 50 கிலோ எடையும், வழுக்கைத் தலையுடனும் இருப்பதாக அந்நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் பெயர் விவரங்களை அடையாளம் காணவும், சந்தேக நபர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.








