Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங், சூரியா கெ.எல்.சி.சி. முன்புறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 மின் ஸ்கூட்டர்கள் தீயில் அழிந்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய அந்த நபர் உள்நாட்டைச் சேர்ந்தவர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. நூர் டெல்ஹான் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ஹொன்டா ஆர்.எக்ஸ் மோட்டார் சைக்கிள், தலைக்கவசம், அணிந்திருந்த ஆடை, தீப்பெட்டி முதலிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தீவைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இச்சம்பவத்திற்கான பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மேலும் 4 மோட்டார் சைக்கிள்கள் சொற்பச் சேதங்களுக்கு இலக்கானதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்