கோலாலம்பூர், ஜாலான் அம்பாங், சூரியா கெ.எல்.சி.சி. முன்புறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 மின் ஸ்கூட்டர்கள் தீயில் அழிந்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய அந்த நபர் உள்நாட்டைச் சேர்ந்தவர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. நூர் டெல்ஹான் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ஹொன்டா ஆர்.எக்ஸ் மோட்டார் சைக்கிள், தலைக்கவசம், அணிந்திருந்த ஆடை, தீப்பெட்டி முதலிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தீவைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இச்சம்பவத்திற்கான பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மேலும் 4 மோட்டார் சைக்கிள்கள் சொற்பச் சேதங்களுக்கு இலக்கானதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


