May 18, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரின் திடீர் மக்கள் சந்திப்பு: பொதுமக்கள் உற்சாகம்!
தற்போதைய செய்திகள்

மாமன்னரின் திடீர் மக்கள் சந்திப்பு: பொதுமக்கள் உற்சாகம்!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

இன்று காலை 7 மணிக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், கோலாலம்பூரில் உள்ள தாமான் பொத்தானி பெர்டானா தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்து, அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மாமன்னரின் இந்த திடீர் வருகை பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியதுடன், அவர்களுடன் மனம் விட்டுப் பேசவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அவர் ஆர்வம் காட்டினார்.

வார இறுதிப் பொழுதுபோக்கிற்காக வந்திருந்த பல்வேறு தரப்பு மக்களும் மாமன்னருடன் உரையாடி மகிழ்ந்தனர். மாமன்னருடைய இந்த மக்கள் சந்திப்பு, நாட்டின் உயரிய தலைவர் மக்களுடன் நெருக்கமாகப் பழகும் தன்மையை எடுத்துக் காட்டியது.

Related News