Mar 16, 2026
Thisaigal NewsYouTube
டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

Share:

உலு சிலாங்கூர், டிசம்பர்.05-

உலு சிலாங்கூரில் நேற்று பொருட்கள் விநியோகம் செய்யும் டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக நம்பப்படும் 54 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று புக்கிட் செந்தோசாவிலிருந்து கோலாலம்பூரை நோக்கித் தனது வேனில் சென்று கொண்டிருந்த 26 வயது டெலிவரி ஊழியரின் வாகனத்தை நிறுத்திய ஆடவர் ஒருவர், தன்னை மோதி விபத்திற்குள்ளாக்க முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் பின்னர், திடீரென அந்த ஊழியரை நோக்கி, துப்பாக்கி போன்ற ஆயுதத்தை நீட்டிய அந்த ஆடவர், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக உலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த ஆடவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மைக்ரோ என்ற எழுதப்பட்டிருந்த ஆயுதம் ஒன்றையும், இன்னும் சில பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் பிரிவு 506-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது | Thisaigal News