May 6, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

Share:

சிபு, டிசம்பர்.05-

சிபு வட்டாரத்தில் ஜாலான் பூலாவ் டுடோங் அருகே, கடந்த புதன்கிழமை கடல்சார் பாதுகாப்புப் படை நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் போது, 2 லட்சத்து 30 ஆயிரத்து 850 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரி ஒன்றில், 9,000 லிட்டர் டீசல் இருப்பதை முதலில் கண்டறிந்த போலீசார், அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய போது, அந்நபர் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாக கடல்சார் பாதுகாப்புப் படை கமாண்டர் அப்துல் ரஹ்மான் மாட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மற்றொரு லோரி ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் 10,000 லிட்டர் டீசல் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த இரு லோர் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்