May 25, 2026
Thisaigal NewsYouTube
அக்டோபர் 25 ஆம் தேதி வழக்கு விசாரணை
தற்போதைய செய்திகள்

அக்டோபர் 25 ஆம் தேதி வழக்கு விசாரணை

Share:

ஷா ஆலம், செப்டம்பர் 27-

கெடா மந்திரி பெசார் சனூசி முகமட் நோருக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டு வழக்கு மீதாான விசாரணை வரும் அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெறும் என்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொள்ளும்படி, சனூசி செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனு, இன்னமும் சட்டத்துறை அலுவலகத்தில் பரிசீலனை இருந்து வருவதால் அவருக்கு எதிரான வழக்கை தொடங்குவதற்கு முன்னர் தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அப்துல் மாலிக் அயோப் தெரிவித்தார்.

துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் இந்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்லம் ஜைனுதீன், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Related News