May 4, 2026
Thisaigal NewsYouTube
விமானப் போக்குவரத்து ரத்து: டோஹா, ஜெட்டாவிற்கான சேவைகளை மார்ச் 4 வரை நிறுத்தியது மாஸ் (MAS)
தற்போதைய செய்திகள்

விமானப் போக்குவரத்து ரத்து: டோஹா, ஜெட்டாவிற்கான சேவைகளை மார்ச் 4 வரை நிறுத்தியது மாஸ் (MAS)

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

மேற்காசியாவில் நிலவி வரும் பாதுகாப்புப் பதற்றங்களாலும் வான்வெளி மூடல் காரணமாகவும், கோலாலம்பூரிலிருந்து டோஹா, ஜெடா, மடினா ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் மார்ச் 4-ஆம் தேதி வரை மலேசியா ஏர்லைன்ஸ் - MAS ரத்து செய்துள்ளது. பாதிக்கப்பட்டப் பயணிகளுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகள் குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அதே வேளை இலண்டன், பாரிஸ் போன்ற நாடுகளுக்கான சேவைகள் மாற்றுப் பாதைகள் வழியாகத் திட்டமிட்டபடி இயங்கும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பயணிகள் தங்களின் பயண விவரங்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 'My Booking' செயலி மூலம் அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்தத் தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் மலேசியா ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News