பதினேழு வயது எஸ்.பி.எம் மாணவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை, ஈப்போ மேருவில் ஏற்பட்ட மரண விபத்தைப்பற்றிய காணொளிகளை பொதுமக்கள் பரப்பவோ, பகிரவோ வேண்டாம் என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான ¬(MCMC) கேட்டு கொண்டது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் பதிவேற்றப்பட்ட காணொளிகளை அகற்றுமாறு MCMC வலியுறுத்தியது.
அத்தகைய உள்ளடக்கத்தை பகிர்வது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு விளைவு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அடிப்படை கோட்பாடுகள், நெறிமுறைகளை மீறுவதாகும் என்று MCMC ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.
அத்தகைய குற்றத்தைப் புரிபவர்கள் குற்றவியல் சட்டம் 233 பிரிவின் கீழ் தண்டிக்கப்படலாம் என்று MCMC தெரிவித்துள்ளது.








