Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சட்டமன்றத் தேர்தலில் கானா பிரகாசம் போட்டியிடுவார்
தற்போதைய செய்திகள்

சட்டமன்றத் தேர்தலில் கானா பிரகாசம் போட்டியிடுவார்

Share:

வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில், போட்டியிடுவதற்கு பெர்சத்து கட்சியின் சாயாப் பெர்செகுத்து சார்பாக இந்தியர்களுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும் என்பதனை அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசீன் அறிவிப்பார் என்று அப்பிரிவின் இந்தியர் பிரிவுத் தலைவர் கானா பிரகாசம் செபாஸ்தியன் தெரிவித்துள்ளார்.
இக்கட்சி மலாய்காரர்கள் மத்தியில் மட்டுமே மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நிலையில், தற்போது நிறை இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதில் இணைந்துள்ளதாகவும் அஃப்லிங்கம் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் வாரியத் தலைவரும், தற்போதைய அறங்காவலருமான கானா பிராகாசம் மேலும் விவரித்தார்.
அரசியலில் ஏற்கெனவே பிபிபி கட்சியில் இணைந்து, சுபாங் தொகுதி தலைவராகவும், கலாச்சாரப் பிரிவுத் தலைவராகவும் கானா பிரகாசம் பொறுப்பேற்றிருந்த போதிலும், அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னைக்குப் பின்னர் பெர்சத்து கட்சியின் சாயாப் பெர்செகுத்துவில் இணைந்து தற்போது 3 ஆண்டுக்காலமாக சேவையாற்றி வரும் வேளையில், விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் நாடறிந்த நகைச்சுவை நடிகருமான இவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!