Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நீர் உத்தரவாதத் திட்டம்
தற்போதைய செய்திகள்

நீர் உத்தரவாதத் திட்டம்

Share:

வறட்சி காலத்தில் போதுமான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கு, மாநில அரசு மேற்கொண்டு வரும், மூல நீர் உத்தரவாதத் திட்டம், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த 30 கோடி வெள்ளி திட்டமானது, சிலாங்கூர் ஆற்றின் முனையிலிருந்து கடல் நோக்கிச் செல்லும் முகத்துவாரம் வரை அதன் நீரோட்டத்தில் ஏற்படும் மாசு அபாயத்தைக் குறைக்கும் என்று அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

நான்கு கட்டமாக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக, வறட்சி காலத்தில், போதுமான அளவு கச்சா நீர் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News