தைப்பிங், ஜாலான் போக்கோ அசாம் தம்பாஹன் னில் கார் ஒன்றின் கதவை தலைக்கவசத்தால் பலம் கொண்டு தட்டி, சர்ச்சையை ஏற்படுத்திய ஆடவரை போலீசார் கைது செய்தனர். 29 வயதுடைய அந்த நபர், நேற்று இரவு 8.45 மணியளவில் போக்கோ அசாம் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.
ஒரு வேலையற்றவரான அந்த மோட்டார் சைக்கிளோட்டி, காரோட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியைக்கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்து மீறல் தொடர்பில் ஏற்பட்ட புரிந்துணர்வின்மையினால் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ரஸ்லாம் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


