தைப்பிங், ஜாலான் போக்கோ அசாம் தம்பாஹன் னில் கார் ஒன்றின் கதவை தலைக்கவசத்தால் பலம் கொண்டு தட்டி, சர்ச்சையை ஏற்படுத்திய ஆடவரை போலீசார் கைது செய்தனர். 29 வயதுடைய அந்த நபர், நேற்று இரவு 8.45 மணியளவில் போக்கோ அசாம் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.
ஒரு வேலையற்றவரான அந்த மோட்டார் சைக்கிளோட்டி, காரோட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியைக்கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்து மீறல் தொடர்பில் ஏற்பட்ட புரிந்துணர்வின்மையினால் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ரஸ்லாம் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


