May 6, 2026
Thisaigal NewsYouTube
ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

Share:

கிள்ளான், நவம்பர்.30-

கிள்ளானில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய ஆடவர் ஒருவர் ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு தென் கிள்ளான், தாமான் மெஸ்ரா இண்டா வீடமைப்புப் பகுதியில் சாலையோரத்தில் நிகழ்ந்தது. இது குறித்து காவற்படை இரவு 8.35 மணியளவில் தகவல் பெற்றதாக சிலாங்கூர் மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள காரணங்களைக் காவற்படையினர் முழு வீச்சில் புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவற்படையைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளஙகளில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, வந்த தகவலின்படி, அந்த வீடமைப்புப் பகுதியில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். என்ன நடந்தது என்பதைச் சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்த போது ஆடவர் ஒருவர் வாகனத்தில் சுடப்பட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட இந்திய நபர், தனது வீட்டிற்கு அருகில் ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தை நிறுத்திய போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக நம்பப்படுகிறது. சம்பவ இடத்தில் காவற்படைத் தடயவியல் சோதனை மேற்கொண்ட நிலையில், சூடுபட்டவரின் தாயார் என்று நம்பப்படும் பெண்மணி ஒருவர், இரவு 11 மணியளவில் காணப்பட்டார். இறந்தவர் தனது மகன் என்று கூறியவாறு துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் அந்த மாது கதறி அழுது கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்