காரில் இருந்த போது மோனாக்சைடு நச்சு வாயுவை நுகர்ந்த இருக்கலாம் என்று நம்பப்படும் மாது ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று இரவு 10.17 மணியளவில் கிளந்தான், கோட்டா பாரு, ஜாலான் சுல்தான் இப்ராஹிம் எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்தது.
அந்த மாதுவுடன் காரில் இருந்த ஆடவரும் நச்சு வாயுவை நுகர்ந்து சுயநினைவு இழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ரோஸ்டி டாட் தெரிவித்தார்.
மிக ஆபத்ததான நிலையில் அந்த ஆடவர், கோத்தாபாரு, ராஜா பெரெம்புவான் ஜைனப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீளா துயரத்தை கருத்தில் கொண்டு இச்சம்பவம் குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று முகமட் ரோஸ்டி, பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு


