பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தைவான் தொடர்பாக அண்மையில் வெளியிட்ட கருத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அரசாங்கப் பேச்சாளரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவுக்கு அளித்த நேர்காணலில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தைவான்-சீனா உறவை வரலாற்றுப் பின்னணியுடன் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு தைவான் கடும் எதிர்வினை தெரிவித்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை என்று ஃபாமி ஃபட்சில் தெளிவுபடுத்தினார்.








