சுமார் 110 கோடி ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க ஒப்பந்தம் தொடர்பாக பொருளாதார அமைச்சின் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாகவும், அரசாங்கத்திற்கு பாதகமான நிபந்தனைகளுடனும் இறுதி செய்யப்பட்டதாக அரசு சாரா அமைப்புகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு மற்றும் முதலீடு, வர்த்தகம், தொழில் அமைச்சின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த ஒப்பந்தம் செய்து முடிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சில் இருந்து விலகிய சிலர் பின்னர் அந்த நிறுவனத்தின் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டதும் நலன் முரண்பாடு குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெற எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை எடுத்து வருகிறது.








