Aug 19, 2026
Thisaigal NewsYouTube
அவசர மீட்புப் படைகளின் தயார் நிலையைச் சோதித்த டபிள்யூ.சி.இ
தற்போதைய செய்திகள்

அவசர மீட்புப் படைகளின் தயார் நிலையைச் சோதித்த டபிள்யூ.சி.இ

Share:

அவசர மீட்புப் படைகளின் தயார் நிலையைச் சோதித்த டபிள்யூ.சி.இ

பேராக், மஞ்சோங்கில் மேற்கு கடற்கரை விரைவுச்சாலையான டபிள்யூ.சி.இ- யில் மூன்று வாகனங்கள் மோதியதாக முன்னறிவிப்பின்றி திடீர் விபத்து ஒத்திகை நடத்தப்பட்டது.

இன்று காலை 10.25 மணியளவில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், போலீஸ், தீயணைப்பு, ஹேஸ்மேட் குழு, மருத்துவமனை, குடிமைத் தற்காப்புப் படை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

அவசரநிலையின்போது மீட்புப் பணிகளின் வேகம், பல்வேறு அமைப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை திறனைச் சோதிப்பதே இதன் நோக்கமாகும்.

ஒத்திகையின்போது விரைவுச்சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டதுடன், எதிர்த்திசை வழித்தடம் செயல்படுத்தப்பட்டது.

உண்மையான அவசரநிலையில் விரைவாகவும் திறம்படவும் செயல்படுவதற்காகவே, பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் இந்த திடீர் ஒத்திகை நடத்தப்பட்டதாக டபிள்யூ.சி.இ தெரிவித்துள்ளது

Related News