லாட்டரி எண்கள் தொடர்பான அதிருப்தி காரணமாக இருக்கலாம் என நம்பப்படும் சம்பவத்தில், நம்பர் கடை உதவியாளர் பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 59 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநர், ஏழு நாட்கள் தடுப்புக்விலில் வைக்கப்பட்டுள்ளார்.
62 வயதுடைய அந்தப் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், அவரது உடலில் சுமார் 50 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைக்காக அவர் செயற்கை மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பெட்ரோல் இருந்ததாக சந்தேகிக்கப்படும் திரவம் அடங்கிய பாட்டில், மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் மற்றும் சட்டை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இல்லை என்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.








