Jul 30, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்

Share:

தங்சோங் மாலிம், ஜூலை 16-

தங்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மாணவியான 25 வயது நூர் ஃபரா கர்தினி அப்துல்லா, கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 26 வயது ஆடவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

அந்த ஆடவர் LANS KOPERAL என்ற அந்தஸ்தில் Slim River போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் என்று நம்பப்படுவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் கூறியுள்ளார்.

பேராக்கில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி, வாடிக்கையாளரிடம் வாடகை வாகனத்தை ஒப்படைத்து விட்டு காணாமல் போனதாக கூறப்படும் நூர் ஃபரா கர்தினி -யின் உடல் நேற்று திங்கட்கிழமை பிணமாக கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த போலீஸ்காரர் தன்னுடன் மிக நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அவரின் மனைவியிடம் அம்பலப்படுத்தப்போவதாக அந்த மாணவி மிரட்டியைத் தொடர்ந்து இந்த கொலை நடத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்த மாணவியின் உடல் உலு சிலாங்கூர், ஸ்ரீ கிளெடாங் கிராமம் -கில் சிலாங்கூர் போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு