Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேருந்து, டிரெய்லர் லோரி மோதல், எட்டு பேர் படுகாயம்

Share:

குளுவாங், மார்ச்.05-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலன் 62 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், குளுவாங் அருகில் இரும்பை ஏற்றி வந்த டிரெயலர் லோரியும் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு வயோதிகர் உட்பட எட்டு பேர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து, 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு ரெங்காம் மற்றும் கூலாய் ஆகிய நிலையங்களிலிருந்து பத்து தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் விரைந்ததாக சிம்பாங் ரெங்காம் ஒருங்கிணைப்பாளர் மஸ்னான் முகமட் தெரிவித்தார்.

இவ்விபத்தில் காயமுற்ற எட்டு பேரில் நால்வர், பேருந்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

44 மற்றும் 23 வயதுடைய இரு ஆண்கள், 25 மற்றும் 30 வயதுடைய இரு பெண்கள் ஆகியோரை இடிபாடுகளிலிருந்து மீட்பதற்கு மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

73 வயது முதியவர் உட்பட இதர நால்வர், இடிபாடுகளில் சிக்கவில்லை என்ற போதிலும் காயமுற்றனர் என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு